districts

img

எழுத்தாளர் இதயவேந்தன் மறைவு: சிபிஎம் இரங்கல்

விழுப்புரம்,நவ.7- விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தா ளர் விழி. பா. இதய வேந்தன் திங்களன்று(நவ.6) காலமானார். நித்தியானந்தம் நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலு க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துகுமரன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப் பன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் மதுசூதனன், கே.வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நந்தனார் தெரு என்ற சிறுகதை மூலம் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட  இதயவேந்தன், 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் குறல்பீட விருதை பெற்றிருக்கிறார். தலித் இலக்கிய முன்னோடியாக அறியப்பட்டவர். விழுப்புரம் நெம்புகோல், தென் பெண்ணை மருதம் அமைப்புகளில் செயற்பாட்டாளராக திகழ்ந்தவர்.