districts

img

கொட்டி தீர்த்த மழை: சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை, நவ.2- சென்னையில் பெரம்பூர், வியா சர்பாடி, அயனாவரம், வில்லி வாக்கம், அம்பத்தூர், ஆவடி, எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது.  சென்னை மாநகராட்சி அலு வலகம், பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதிகளில் தலா 17 செ.மீ மழையும், சோழிங்க நல்லூர், அயனாவரம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழையும், ஆவடியில் 17 செ.மீ மழை, பொன்னேரியில் 16 செ.மீ மழையும் பதிவானது. இதனால் சென்னையில் ஒரு சில இடங்களில் 2வது நாளாக தண்ணீர் தேங்கி உள்ளது. கொளத்தூர் வெற்றி நகரில் இரு சக்கர வானங்கள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் தேங்கி யது. வியாசர்பாடி ஜீவா சுரங்கப்  பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மந்தவெளி பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதேபோல், வில்லிவாக்கம் ஜனநாதன் தெரு, பெரம்பூர் பிபி சாலை, பெரம்பூர் பெரக்ஸ் சாலை, பட்டாளம், திருவொற்றியூர் மேம்படுத்த உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை உட னடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பட்டாளம்-பெரம்பூர் பெரக்ஸ் சாலையை மூழ்கடித்த மழை நீரால் புதனன்று(நவ.2) காலை 9 மணிக்கு பணிக்கு சென்ற இளம் பெண் ஒருவர் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து மயக்கமடைந்தார். அருகிலி ருந்தவர்கள் அவரை காப்பாற்றி னர். இந்த நிகழ்வு இந்து சமய அற நிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இல்லம் அரு கில் நிகழ்ந்தது. மழை நீர் பெருக்கத்தின் காரண மாக சென்னை தி.நகர் ரங்கராஜ புரம் மற்றும் பெரம்பூர் கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்த சென்னைப் போக்கு வரத்து காவல்துறை அந்த சுரங்கப்பாதைகளை மூடியது. திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு செல்லும் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளது.
அமைச்சர் ஆறுதல்
சென்னை ஆவடியில் அதிக பட்சமாக 17 செ.மீ கொட்டியது தீர்த்து உள்ளது. இதன் காரண மாக ஆவடி மற்றும் திருமுல்லை வாயல் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான இடங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்தனர். சாலை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் தண்ணீ ரில் தத்தளித்தபடி சென்று வரு கின்றன. கனமழை காரணமாக ஆவடி காவல் நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் காவலர்கள் அவதி அடைந்துள்ளனர்.  இதற்கிடையே ஆவடி பகுதி யில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதி களை அமைச்சர் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற உத்தர விட்டார்.
பாதிப்பு இல்லை: அமைச்சர்
சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜமன்னார் சாலை , பி.டி. ராஜன் சாலை ராமசாமி சாலை, டபுள் டேங்க் ரோடு, ஆர்.கே சண்முகம் சாலை,அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் “சென்னை யைப் பொருத்தவரை 36 மணி நேரத்தில் 15 செமீ முதல் 30 செமீ வரை மழை பெய்துள்ளது. இருந்தாலும் மழை பாதிப்பு கடந்த ஆண்டைவிட மிகமிக குறைவு. இதனால் ஓரிரு இடங்க ளில் மட்டுமே பாதிப்பு உள்ளது” என்றார். கடந்த ஆண்டு சோழிங்க நல்லூர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா னது. இந்த ஆண்டு சோழிங்க நல்லூர், செம்மஞ்சேரியில் பாதிப்பு இல்லை. பி.டி.ராஜன் சாலை யில் கடந்த ஆண்டு இடுப்பு அளவு தண்ணீர் இருந்தது இந்த ஆண்டு 2 இன்ச் தண்ணீர் தான் நிற்கிறது மேடவாக்கம் புழுதிவாக்கம் உள்ளகரம் பகுதிகளிலும் நீர் தேக்கம் இல்லை என்றும் அவர் கூறினார். சென்னையில் கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை. இதற்குக் காரணம் சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கும். அதை போக்கும் வழிவகைகள் என்ன என்பதைக் கண்டறிய முதல்வர் ஒரு குழு அமைத்து அறிக்கை பெற்று அதற்கேற்ப மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கிவிட்டது” என்றார். மழைக்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக வெள்ளம் தேங்கும் நிலையில் இந்த ஆண்டு தேங்கவில்லை. இத னால் வழக்கமான வேகத்தில் ரயில்களை இயக்கி வருவதாக வும், எஞ்சிய ரயில் நிலை யங்களும் இதுபோன்ற பணி மேற்கொள்ளப்படும் என நம்புவ தாகவும் சென்னை ரயில் கோட்ட மேலாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, வட சென்னையில் மழை நீர் வடியா மல் உள்ள பகுதிகள், ஓட்டேரி நல்லா கால்வாய், பெரம்பூர் பிரதான சாலை, திருவிக நகர், திருவொற்றியூர் கார்கில்நகர் கொளத்தூர் ஆகிய பகுதிகளை அமைச்சர்கள், மேயர், அதிகாரி கள் ஆய்வு செய்து வெள்ளத்தை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர்.