districts

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி

சென்னை, மே 10– சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல்  குளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலியானார். சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில்  தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு  வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் செந்தில் குமாரின் மகன் ஹரிகரன் (வயது 4).   உஷா திங்களன்று வேலைக்கு சென்ற போது தனது  அண்ணன் மகன் ஹரிகரனையும் அழைத்து சென்றார். அங்கு அவர் வீட்டு வேலை பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.  அப்போது வீட்டு உரிமையாளரின் 2 குழந்தைகளுடன் சேர்ந்து சிறுவன் ஹரிகரன் விளையாடி கொண்டு இருந்தான்.  பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற குழந்தைகள் 3 பேரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 5 அடி  நீச்சல் குளம் அருகே ஓடி பிடித்து விளையாடினர். அப்போது  எதிர்பாராத விதமாக சிறுவன் ஹரிகரன் கால்தவறி நீச்சல் குளத்தில் விழுந்தான். இதையடுத்து உடன் விளையாடிய குழந்தைகள் 2  பேரும் அழுது கூச்சலிட்டனர். இதைகேட்ட அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து ஹரிகரனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஹரிஹரனை பரிசோதித்த  மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.