districts

img

தி.நகர் உஸ்மான் ரோடு மேம்பாலம் நீட்டித்து கட்டப்படுகிறது

சென்னை,அக்.12- சென்னையின் வியாபார பகுதியாக திகழும் தி.நகரில் போக்குவரத்து நெரிச லுக்கு தீர்வு காண கடந்த காலத்தில் ரூ.19.80  கோடி மதிப்பில் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் அருகே உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது.    இந்த மேம்பாலம் ரங்கநாதன் தெரு  அருகே இறங்கும் வகையில் அமைக்கப் பட்ட காரணத்தால் அந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரூ.131 கோடி செலவில் தி.நகர் உஸ்மான்  ரோடு மேம்பாலத்தை நீட்டித்து கட்டுவதற் கான பணிகளை தொடங்கி உள்ளது. இதற்காக தெற்கு உஸ்மான் சாலை மற்றும்  சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. அதாவது  ரங்கநாதன் தெரு அருகே இறங்கும் மேம்பா லம் ரோட்டை ‘கட்’ செய்து தகர்த்து எடுத்து  விட்டு ‘பில்லர்’ அமைத்து பேருந்து நிலை யத்தை தாண்டி பாலம் செல்லும் வகையில்  மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில் தி.நகர்  எம்.எல்.ஏ. அலுவலகம், சிவ விஷ்ணு கோவில் அருகே மேம்பாலத்தில் இருந்து  தி.நகர் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள்  இறங்கவும் மேம்பாலத்தில்  ஏறவும் இருபுற மும் பக்கவாட்டில் வசதிகள் ஏற்படுத்தப் பட உள்ளது. இந்த மேம்பால பணிகளுக்கு  டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ‘பில்லர்’ அமைக்க பேருந்து நிலையம் அருகே மண் பரிசோதனை நடை பெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 55 தூண்களுடன் 7.5  மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதை யாக அமைய உள்ளது. இந்த பாலம் கட்டி  முடிக்கப்பட்டால் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வாகனங்கள் நிற்காமல் பாலத்தில்  சென்றுவிடும். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க இரும்பு மற்றும் கான்கிரீட்  கலவை கலந்து காம்போசைட் கர்டர் முறை யில் மேம்பாலம் கட்டப்படுகிறது. அதாவது தூண்கள் அமைக்கும் பணிகள் மட்டும் தி.நகரில் நடைபெறும். மற்ற கான்கிரீட் பணி கள் வெளி இடத்தில் செய்து முடித்து கொண்டு வந்து தூண்களில் பொருத்தி விடு வார்கள். இந்த மேம்பாலத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க இலக்கு  நிர்ணயித்து உள்ளனர்.