districts

img

அதீத அபராதத்தை கண்டித்து வாகனத்தை நிறுத்தி சென்னையில் பெருந்திரளான ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை, பிப். 28 - புதிய மோட்டார் வாகன சட்டப்படி அதீத அபராதம் விதிப்பதை கண்டித்து செவ்வாயன்று (பிப்.28) தமிழ்நாடு முழுவதும் 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக வடசென்னையில் 6 மையங் களில் நடைபெற்ற போராட் டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிக நகர்  ஓட்டேரி மேம்பாலம் அருகே சம்மேளன தலை வர் ஆறுமுக நயினார், கொளத்தூர் அண்ணாசிலை அருகே சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி திருவொற்றியூர் அஜாக்சில் ஆர்.ஜெயராமன் (சிஐடியு) ராயபுரம் மிண்ட் பேருந்து நிலையம் அருகே ஆர்.மணி மேகலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனை அருகே சு.லெனின் சுந்தர் (சிஐடியு) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் ஆட்டோ, மாநகர போக்குவரத்து, சாலை போக்குவரத்து ஓட்டுநர்கர்களும் ஊழி யர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். இதில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் போக்குவரத்து காவல்துறையின் அதீதி அபராதத்தை எதிர்த்தும் தொழிலாளர்கள் முழக்க மிட்டனர்.
தென்சென்னை
தென்சென்னை மாவட்டம் ஆலந்தூர் நீதி மன்றம் ரவுண்டானா அருகே சிஐடியு மாவட்டச்  செயலாளர் பா.பால கிருஷ்ணன், தாம்பரத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி செந்தில்குமார், சைதாப் பேட்டையில் ஆட்டோ சங்க பொருளாளர் பக்கிரி, திருவான்மியூரில் மகாநகர் மோட்டார் வாகன சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வன், அசோக்பில்லரில் ஆட்டோ சங்க நிர்வாகி சாந்தி, கோயம்பேட்டில் ஆட்டோ சங்க தலைவர் அனீபா, உமாபதி, மதுரவாயலில் ஆட்டோ சங்க தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தியசென்னை
மத்தியசென்னை மாவட்டத்தில் நடைபெற்ற வாகன நிறுத்தம் போராட் டங்களில் ஸ்டெர்லிங் சாலை யில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசனும், ராயப்பேட்டை மணிக்கூண்டில் சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமாரும், அண்ணாநகர் ரவுண்டானா வில் சிஐடியு மாவட்டச்  செயலாளர் சி.திருவேட் டையும், துறைமுகம் பகுதியில் மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணனும், மேகலா தியேட்டர் அருகே  சிஐடியு மாவட்ட நிர்வாகி ெ ஜ.பட்டாபியும், அயானா வரம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணைத் தலைவர் பி.சுந்தரமும் கலந்து கொண்டனர்.