சென்னை, மார்ச் 13- சென்னையில் உள்ள ஆசிய சிறுநீரகவியல் நிலையத்தில் (AINU -ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி) ‘டா வின்சி ரோபோ உதவியுடன் சிறுநீர் பாதையில் துல்லிய மான நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படடுள்ளது. புதுமையான இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்கும் ஒற்றை சிறப்பு பிரிவு மருத்துவமனை இதுவாகும் ஒன்றாகும். சிக்கலான, மிகக்குறைவான ஊடுருவலுடன் கூடிய நுண் துளை அறுவைசிகிச்சைகளை துல்லியமாகவும், கச்சிதமாகவும் சரியான இடத்தில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் செய்வதை நவீன அறுவைசிகிச்சை சாதனமான டாவின்சி ரோபோ சாத்தியமாக்குகிறது. இச்சாதன அமைப்பு சிறப்பான பார்வைத் திறனையும், மேம்பட்ட கைவினைத் திறனை யும் கொண்டுள்ளதாக ஏஐஎன்யூ நிர்வாக இயக்குநர் டாக்டர். பி.அருண்குமார் கூறினார். மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சைகளையும் அதிக துல்லியத்தோடு மிகச்சரியாக எங்களால் மேற்கொள்ள இயலும்; இதன் மூலம் நோயாளியின் வலி மற்றும் தழும்பு அளவு குறைவாக இருப்ப தோடு விரைவாக மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதையும் இது ஏதுவாக்குகிறது என்று அவர் தெரிவித்தார். நிர்வாக இயக்குநரும் மற்றும் சிறு நீர்ப்பாதையியலில் முதுநிலை நிபுணரு மான டாக்டர் டி வெங்கட் சுப்ரமணியம் பேசு கையில், “புதுமையான தொழில்நுட்பமான டாவின்சி ரோபோ, அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் வழிமுறையையே முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. வழக்கமான லேப்ராஸ்கோப்பி சிகிச்சை யோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய மாற்றம் என்றார்.