திருவள்ளூர், ஜன.2- மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில்,மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியில் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வீடு கட்டுவதற்கான கட்டணம் உயரும்,வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயரும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புதுவாயல்-பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மார்க்கெட் பகுதியில் வியாழனன்று (ஜன 2), திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கருத்துக்களை கேட்கா மல் ஊராட்சியை பேரூராட்சியுடன் எப்படி? இணைக்கலாம் என்று போராட்டக்காரர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். மேலும்,இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து வதாக போலீசார் கூறினர்.ஆனால், பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் நிறை வேறவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பது என்று கூறி கருப்பு கொடியுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் “கோரிக்கையை மனுவாக கொடுங்கள்” அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.