districts

img

மக்கள் போராட்டங்களை களத்திலிருந்து கட்டமைப்போம் சமூக செயற்பாட்டாளர் மருதையன் பேச்சு

சென்னை, பிப். 8 - ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை களத்தி லிருந்து கட்டமைப்போம் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கூறினார். ‘மோடி - அதானி கூட்டுக் கொள்ளை முட்டுச்சந்தில் முதலாளித்துவம் பேசலாம் வாங்க’ எனும் பொருளில் திங்களன்று (பிப்.6) திருவல்லிக்கேணியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய மருதையன்,  எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள், அதானிக்கு கொடுத்துள்ள கடனை பற்றி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. அந்த நிறுவனங்கள், அதானிக்காக போட்டுள்ள பிணைய தொகை குறித்து உண்மைத் தகவல்கள் வெளியே வராமல் உள்ளன என்றார். பணப்பொருளாதாரம் முடக்கப்பட்டு, டிஜிட்டல் பொருளாதாரம் ஊக்கு விக்கப்படுகிறது. இத னால், வங்கிகள் வாயி லாக எளிதாக நிதியை திரட்டு வதோடு, வரி விதிப்பை அகலப்படுத்து கின்றனர். இது ஒரு வகையான படுகொலை. பெருமுதலாளிகள் திருடு வதை திறமை என்கின்றனர். முத லாளித்துவ வாதிகளிடம் அறம், ஒழுக்கம் கிடை யாது. இந்துத்துவம் என்பதே ஊழல் நிறைந்தது. முதலாளித்துவமும், இந்துத்துவமும் இணைந்து செயல்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் அணியை உருவாக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை களத்திலிருந்து கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.கே.கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசுகை யில், “மோடிக்கு எதிராக பேசியவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது சிறையில் தள்ளப்படுகின்றனர். மோடி கும்பல் செய்த தவறுகளை மறைக்க உச்சநீதிமன்ற நீதிபதியை கூட விலைக்கு வாங்குகிறார்கள். நாட்டை காக்க வேண்டியவர்களே, கொள்ளையடிக்க துணை போகிறார்கள். சுதந்திர இந்தியாவில் உணவுக்கு வரி போடுகிறார்கள். அதே சமயம் முதலாளிகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை தள்ளு படி செய்கிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்து, நமக்கான இந்தியாவை உருவாக்க ஒற்றுமையோடு இணைந்து நிற்போம்” என்றார்.
ராஜீவ்காந்தி
திமுக மாணவர் அணித்தலைவர் ராஜீவ் காந்தி பேசுகையில், மோடி வளர்கிற போதெல்லாம் அதானியும் வளர்கிறார். அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது போல் மோடியும் செல்லாக்காசாகி ஒருநாள் வீழ்வார். தேசப்பக்தி என்ற பெயரில் நாட்டையே கொள்ளை அடிக்கின்றனர். ஊழலில் மாட்டிக் கொண்டதும் வெள்ளைக்காரன் கொடுத்த (`ஹிண்டன்பர்க்) அறிக்கை என்று திசை திருப்பு கிறார்கள். அதானியின் சொத்துக் களை வெளிநாட்டில் பரா மரித்து வந்தது இங்கி லாந்து பிரதமரின் சகோதரர்தானே? அப்போது எங்கே போனது தேசபக்தி? என்று கேட்டார். மோடியின் ராமனான அதானியை சந்தேகிக்கிறோம், நாடாளு மன்ற கூட்டுக்குழு விசா ரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும் அவர் கூறினார். கூட்டத்திற்கு கட்சியின் பகுதிச்செயலாளர் கவிதா கஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர்கள் நா. வீரபெருமாள், நா. நந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.