மூங்கில்துறைப்பட்டு, பிப். 18 - ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடமாமாந்தூர். இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள பள்ளியின் பின்புறமாக கொட்டப்படுகிறது. குப்பை கள் குவிந்தவுடன் எரிக்கப்படுகிறது. இத னால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சிய ளிக்கிறது. இதனால் சாலை களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகின்றனர். குப்பைகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருப்ப தால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியா மல் அடிக்கடி விபத்து ஏற்ப டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ள னர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இனியாவது, குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.