districts

img

ஆக்சிசன் செரியூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்

திருப்போரூர் அரசு தாலுக்கா மருத்துவமனையில் இயங்கும் கொரோனா சிகிச்சை மையத்துக்கு எய்டு இந்தியா அமைப்பின் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்மதிப்புள்ள 10 கட்டில், 10 மெத்தை, ஆக்சிசன் செரியூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் எய்டு இந்தியா ஒன்றிய திட்ட மேலாளர் விமலா, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், தாலுக்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் மைதிலி,மருத்துவர் அனுசியா, தலைமை செவிலியர் சரவணகுமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;