சென்னை,மார்ச் 30- சென்னை சென்ட்ரல்-பேசின் பாலம் நிலையங்கள் இடையே பாலம் கட்டுமானப் பணி நடக்க உள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவை ஏப்.1-ந் தேதி முதல் ஏப்.25ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மூர் மார்க்கெட்- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் இரவு 10.35 மணி ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி செல்லும் இரவு 11.55 மணி ரயில் ஆகிய 2 ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 4.50 மணி ரயில், சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 5 மணி ரயில் ஆகியவை பேசின் பாலம்-மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-கும்மி டிப்பூண்டி செல்லும் அதிகாலை 6.25 மணி ரயில், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை செல்லும் காலை 7.30 மணி ரெயில் ஆகியவை, மூர்மார்க் கெட்-பேசின் பாலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் இரவு 8.45 மணி ரயில் கொருக்குப்பேட்டை - மூர்மார்க் கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. பட்டா பிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 10.45 மணி ரயில் ஆவடி - மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-ஆவடி செல்லும் இரவு 11.30 மணி ரயில், மூர்மார்க் கெட்-வியாசர்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணி-மூர்மார்க் கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில், அரக்கோணம் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 9.45 மணி ரயில், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் செல்லும் இரவு 9.40 மணி ரயில் ஆகியவை சென்னை கடற்கரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில்கள் பேசின் பாலம், சென்னை சென்ட்ரல் செல்லாது. இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட வேண்டிய 2 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள், சென்னை கடற்கரை நிலை யத்தில் இருந்து புறப்படும்.