சென்னை, அக். 21 - கோயம்பேடு பேருந்து நிலை யத்தை கல்வி வளாகமாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் 11வது பகுதி மாநாடு ஞாயிறன்று (அக்.20) கோயம் பேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கே.கே.நகர் மற்றும் நடேசன் நகர் மருத்துவமனை களை மேம்படுத்த வேண்டும், கோயம்பேடு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடம் அருகே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், சாலிகிராமம் பகுதியில் அரசு பிரிவியூ தியேட்டர் அமைக்க வேண்டும், சூளைப்பள்ளம் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், சிவலிங்கபுரம் வாரிய வீடுகளை புதுப்பித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் தலை மையில் நடைபெற்ற பொதுமாநாட்டில், செங்கொடியை பகுதிக்குழு உறுப்பினர் எம்.நீலமேகம் ஏற்றினார். பகுதிக் குழு உறுப்பினர் டி.விஜயகுமாரி வரவேற்க, பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கந்தன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தொடக்கவுரையாற்றி னார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிக் குழுச்செயலா ளர் இ.ரவியும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமியும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், கே.வனஜ குமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் தீ.சந்துரு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார் பகுதிக்குழு தேர்வு 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.