சென்னை, அக். 25- “திருக்குறள் 140 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2053 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட ஒரு நூல், இன்றளவும் நாடாளுமன்றத்தில் கூட மேற்கோள் காட்டப்படுகிற அளவிற்கு உயர்வைப் பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட நூலை மாணவர்கள் கற்றால் மட்டும் போதாது. அதன் வழியில் நடக்கவும் வேண்டும்” என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் கேட்டுக்கொண்டார். ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் மாநில அளவிலான திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், வடசென்னையில் முகப்பேர், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் அன்று நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய போது அவர் இவ்வாறு கூறி னார். இந்நிகழ்வில் அவர் மேலும் பேசியதா வது: “திருக்குறளில் இல்லாத கருத்துக்களே கிடையாது. கற்க கசடற, ஈத்துவக்கும் இன்பம் என்பது எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளுவரால் சொல்லப்பட்டு இருக்கின்றன. அத்தகைய பெருமை வாய்ந்த நூல் திருக்குறள்” என்றார். இந்தத் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் சென்னையில் அண்மை யில் (அக். 15, 16) இரு தினங்கள் நடை பெற்றன. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் சேர்த்து மொத்தம் 1066 பேர் கலந்து கொண்டனர். மாணவ சமுதாயத்தினரிடையே திருக் குறளின் கருத்துக்களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், பேச்சாற்ற லைப் பெருக்கவும், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தமிழகம் மற்றும் புதுவையில் திருக்குறள் போட்டியினை நடத்தி வருகிறது.