districts

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை

சுமைப்பணி தொழிலாளர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக. 21- கோயம்பேடு வணிக வளாகத்தில் வேலை  செய்யும் தொழிலாளர்க ளுக்கு, புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை வழங்க  வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள் ளது. இதுதொடர்பாக கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி முதன்மை நிர்வாக அதி காரியிடம், சென்னை செங்கற்பட்டு லோடிங் அன்லோடிங் அண்டு b ஜனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின் கோயம்பேடு கிளைத் தலைவர் ம.நீலமேகம், செயலாளர் கே.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில், சமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண் டும், பணி செய்யும் இடங்களிலேயே நல வாரிய பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற் கொள்ள வேண்டும், பணியின் போது இறக்கும் தொழிலாளிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், வணிக வளாகத்தில் உள்ள மினி  கிளினிக்கை 24 மணி நேரமும் செயல்படும்  ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற  வேண்டும், மீன்பாடி வண்டி தொழிலாளர்கள்,  கடையின்றி வாடகைக்கு வண்டி ஓட்டும் தொழிலாளர்களுக்கும் புகைப்படத்துன் கூடிய உரிமம் வழங்க வேண்டும். மீன்பாடி வண்டிகள் நிறுத்த மேற்கூரை அமைத்துத் தர வேண்டும், மே முதல் நாளில் வணிக வளாகத்திற்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டிருந்தன.

;