சென்னை, ஏப். 17- ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண் டும் என்று ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டா யமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ரயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.