மயிலாடுதுறை, நவ.29 - மயிலாடுதுறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக ளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பேர ணியில் 700-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உத விக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்க திட்ட அலுவலர் பழனி, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.முருகதாஸ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.மஞ்சுளா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.