districts

img

பார்டர் தோட்டம், எல்ஜிஎன் சாலை குடியிருப்புக்கு மின் இணைப்பு

சிபிஎம் தலைவர்களிடம் வாரியத் தலைவர் உறுதி

சென்னை, ஆக. 27- பார்டர் தோட்டம் மற்றும் எல்.ஜி.என்  சாலை பகுதி குடியிருப்புகளுக்கு விரைவில்  மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் உறுதி அளித்துள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி யில் பார்டர் தோட்டம் மற்றும் எல்.ஜி.என்  சாலை பகுதிகள் உள்ளன. அண்ணா சாலைக்கு அருகில் உள்ள இந்த குடியிருப்பு கள் மின் இணைப்பு இல்லை. மின் இணைப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. மின்சாரம் இல்லாததால் அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுவதுடன். குழந்தைகளின் படிப்பும் தடைபட்டுள்ளது. எனவே, மின்  இணைப்பு கோரி ஏராளமானோர் ஆன்லை னில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் மின் இணைப்பு வழங்க மறுத்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைத்த பிறகும், இணைப்பு வழங்கா மல் உள்ளனர். இது தொடர்பாக வெள்ளியன்று (ஆக.27)  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானியிடம், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி. செல்வா மனு அளித்தார். அதனைப்  பெற்றுக் கொண்ட அவர், அந்தப் பகுதி களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள் ளார். இந்நிகழ்வின்போது மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் இ.சர்வேசன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பகுதி தலைவர் கவிதா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;