districts

img

சென்னையில் 3 மையங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 11- மாற்றுத்திறனாளிகள் பெற்று வந்த  சலுகைகளை பறிப்பதை கைவிடக் கோரி  புதனன்று (ஆக.11) சென்னையில் 3 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளா கத்தில் மத்திய சென்னை, வடசென்னை மாவட்டங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, மாவட்ட நிர்வாகிகள் சுரேந்திரன், எஸ். மனோண்மணி, மனோகரன் (மத்திய சென்னை), கி.ராதை, ஜெயச்சந்திரன், நட ராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். கிண்டி ரயில் நிலைய வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் டி.வில்சன், துணைச் செயலாளர் எஸ்.கே. மாரியப்பன், தென்சென்னை மாவட்ட பொரு ளாளர் கே.பி.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலா ளர் என்.சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

;