சென்னை, மார்ச் 22- சென்னை பெருநகரோடு 2011க்கு பிறகு புதிதாக சேர்ந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 70 விழுக்காடு நிறை வடைந்துவிட்டன. புதிதாக இணைந்த திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர் ஆகிய விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடந்து வருகிறது. புதிதாக இணைந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் தெருக்களில் கடைசி பகுதி வரை செல்வது இல்லை. மேடான பகுதிகளுக்கு தண்ணீர் போகாததால் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தினசரி 420 லாரிகளில் இதுபோன்று வினியோகிக்கப் படுகிறது. இது தவிர சென்னை நகரின் பழைய பகுதிகளிலும் ஒரு சில இடங்க ளுக்கு குடிநீர் குழாய் மூலம் இன்னும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. 80 விழுக்காடு பகுதிகள் மட்டுமே குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளன. குடிசைப் பகுதிகளுக்கு 8000 தொட்டிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத இந்த பகுதி களுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தெருவில் உள்ள தொட்டியில் ஊற்றி விடுவார்கள். அதில் இருந்து பொது மக்கள் குழாய்களில் பிடித்து செல்கிறார் கள். இதுபோல தினமும் 859 தெருக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் 2200 நடைகள் தண்ணீர் இலவசமாக லாரிகள் வழியாக சப்ளை செய்யப்படுகிறது. இதற்கிடையில் ஆன்லைன் வழியாக ‘டயல் புக்கிங்’ செய்யும் முறை தினமும் 900 லாரிகள் குடிநீருக்காக பதிவு செய்யப்படுகிறது. பணம் செலுத்தி குடிநீர் பெறும் இந்த முறையில் 450 லாரிகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பதிவாகிறது. மீதமுள்ள 450 லாரிகள் சென்னையின் மத்திய பகுதியில் இருந்து புக் ஆகிறது.
சென்னை நகருக்குள் பணம் செலுத்தி லாரியின் மூலம் குடிநீர் பெறும் வீடுகள் எத்தனை உள்ளன? எதற்காக லாரி யில் தண்ணீர் வாங்குகிறார்கள். அவர்க ளுக்கு தேவை என்ன? நகருக்குள் இன்னும் எத்தனை வீடுகள் குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது என்பதை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது 10 லட்சம் குடிநீர் இணைப்பு கள் உள்ளன. எந்தெந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்காமல் உள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார் கள். குடிநீருக்கு பணம் செலுத்தி புக்கிங் செய்யும் வீடுகளை கணக்கெடுத்து முழுமை யான ஆய்வு நடத்தி அந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினி யோகம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. லாரிகள் மூலம் சப்ளை செய்வதை குறைத்து எந்தெந்த வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை என்பதை கணக் கெடுத்து அந்த பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.