districts

விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிகளை தடை செய்க

செங்கல்பட்டு, ஆக 17- விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் ஆக்கினாம்பட்டு கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கல்குவாரி பூமிக்கடியில் 200 அடி ஆழத்திற்கு மேல் கல் உடைத்து எடுத்து வருவதால் அருகில் உள்ள 80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு நீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துமீறி அப்பகுதியில் கல்லுடைக்கும் இயந்திரத்தின் மூலம் கல்லுடைத்து வருவதால் அதிலிருந்து வரும் கல் தூசி விவசாய நிலங்களில் படர்ந்து விவசாயம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படும் கல் குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் செய்யூர் வட்டச் செயலாளர் ராn ஜந்திரன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல்நாத்தை சந்தித்து மனு அளித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, பாதிப்புக்குள்ளான விவசாயி தனலட்சுமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

;