districts

img

அரசூர் சேட்டு நினைவு தின அஞ்சலி கூட்டம்

விழுப்புரம், ஜன.18- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட் பட்ட அரசூர் சேட்டின் 34-வது நினைவு அஞ்சலி கூட்டம் புதனன்று (ஜன.18) அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் சே.அறிவழகன் (விழுப்பு ரம்),  எம்.கே.பழனி (கள்ளக் குறிச்சி), எஸ்.வினோத் குமார் (கடலூர்) விழுப்புரம் மாவட்டத் தலை வர் எஸ்.பிரகாஷ் உட்பட ஏராளமானோர் கலந்து சேட்டு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.