districts

img

குடிமனைப் பட்டா வழங்ககோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

சென்னை, பிப். 10 - திருநீர்மலை பகுதியில் நீண்ட காலமாக குடி யிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி வெள்ளியன்று (பிப்.10) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை, திருமங்கை ஆழ்வார் புரத்தில் நீதி மன்ற உத்தரவுப்படி கணக்கெடுக்கப்பட்டது. இதில் விடுபட்ட குடும்பங்க ளுக்கும், ஸ்ரீரங்கநாதர் பெரு மாள் கோவிலை சுற்றியுள்ள குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். திருமங்கை ஆழ்வார் புரத்தில் செயல்படும் கிரஷர்  களை மூடு வேண்டும், மாநகராட்சி அலுவலக மாக மாற்றப்பட்டுள்ள சமு தாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தி யது. இந்த போராட்டத்தை யடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து மனுக்களை பெற்றுக் கொணடனர்.

அப்போது செய்தி யாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் கூறிய தாவது: தமிழகத்தில் குடி மனைப்பட்டா இன்றி மக்கள் சாலை, சாக்கடை, பலவகை புறம்போக்கு நிலங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் வீடில்லாதவர்களில் 96 விழுக்காட்டினருக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இதுபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்தி னால் மட்டுமே குடியிருப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். திருநீர்மலையில் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களும், பழங்குடி யினரும் பெரும்பகுதியாக உள்ளனர். தலைமுறை தலைமுறையாக வசிக்கும் மக்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும். அங்குள்ள மக்க ளின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் கேடுவிளை விக்கும் குவாரிகளும், கல் அரைக்கும் கிரஷர்க ளும், தார் கலவை நிலை யங்களும் உள்ளன. மனி தர்கள் வாழ முடியாத வகையில் அந்த பகுதி யின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து குவாரிகளும் சட்ட விரோதமாக செயல்படு கின்றன. குவாரிகள், கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை புறநகர் மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,  துணைச் செயலாளர் கே.நேரு, மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் பி.வீரன், சிபிஎம்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி, பகுதிச் செயலாளர்கள் எம்.சி.பிர பாகரன் (பல்லாவரம்), தா.கிருஷ்ணா (தாம்பரம்) உள்ளிட்டோர் பேசினர்.