districts

img

மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலை ஏமாற்றுகிறார்

காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரிகுற்றச்சாட்டு

சிதம்பரம், ஆக.9- மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கும். மேகதாது அணை குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைப் போராட்டம்  என்ற பெயரில் ஏமாற்றுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  மேகதாது அணை கட்டுவ தற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் என்  பது வரவேற்கத்தக்கது. இதில் விவசாயி களுக்கு தேவையான அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். அவரும் ஒரு விவசாயி தான் என்றார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுதாகவும் தமிழக அரசு கடந்த 100 நாட்களில் ஏராள மான கோரிக்கைகளை நிறைவேற்றி யுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

;