2 மான்கள் உயிரிழப்பு
திருபெரும்புதூர்,மே 23- திருபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்த மான மாந்தோப்பில் ஞாயி றன்று மாலை 2 புள்ளி மான்கள் இறந்து கிடப்ப தாக பெரும்புதூர் வனச்சரக அலுவலருக்கு காவல் துறையினர் தகவல் தெரி வித்தனர். வனச்சரகரின் விசார ணையில், 2 புள்ளி மான்களும் வழி தெரியாமல், சேந்தமங்கலத்தில் மாந்தோப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளன. அங்கு காவலுக்கு இருந்த நாய்கள் துரத்தவே, அங்கி ருந்து தப்பிக்க ஓடியபோது முள்வேலியில் சிக்கி பலியானது.
சென்னை - தில்லி இடையே 4 விமானங்கள் ரத்து
சென்னை, மே 23- தில்லியில் பலத்த மழையால் சென்னை - தில்லி இடையே திங்க ளன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாம தத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.
அழுகிய மீன்கள் பறிமுதல்
சென்னை,மே 23- சென்னை சிந்தா திரிப்பேட்டை மீன் சந்தை யில் மீன்களின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. ஞாயிறன்று காலை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிகாரி கள் ஆய்வு நடத்தினர். அப்போது அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் சரியான விதிமுறைகளை பயன்படுத்தி பதப்படுத்தப் படாத மீன்களும் விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி
சென்னை, மே 23- சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை நடைபெறும் பேட்டரி கார் சேவையால் வயதான பயணிகள் மாற்றுத்திறனாளிகள் என 2 ஆயிரம் பேர் இலவசமாக பயன்பெறுகின்றனர்.. தற்போது 2 பேட்டரி கார்கள் மூலம் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து மூர்மார்க்கெட் புறநகர் மின்சார நிலையம் மற்றும் சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு மாற்று திறனாளிகள், வய தானவர்களை இலவசமாக ஏற்றி செல்கிறார்கள். மேலும் பயணம் செய்ய உள்ள ரயில் பெட்டி வரை அழைத்து செல்லப்படுகிறது.
அம்மா உணவகங்களுக்கு விற்பனை இலக்கு
சென்னை, மே 23- அம்மா உணவகங்களில் சரிந்த விற்பனையை அதி கரிக்க விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மண்டலம் வாரியாக கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளில் நடைபெறும் 3 மாத விற்பனையின் அடிப்படை யில் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சாலைகள், பாலப்பணிகள் முறையாக நடைபெற உள்தணிக்கை
திருவள்ளூர்,மே 23- நெடுஞ்சாலைத் துறை யினர் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாக வும், தரமாகவும் நடைபெறு கிறதா என உறுதி செய்ய உள்தணிக்கை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத் தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திரு வள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மற்றும் காக்களூர் புட்லூரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபா யில் 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி, நடந்து வருகிறது. இதில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் பணி நிறைவடைந்து விட்டது. இதேபோல், நெடுஞ் சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேக மாக நடந்து வருகிறது. மின் கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்ப ங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. பட்டா பிராம் பகுதியில் ரயில்வே கேட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளும் ஆய்வு செய்தனர். மேலும், திருவ லங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பால பணி கள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்து அர சுக்கு அறிக்கை அனுப்பப் படும் என்று உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
சென்னையில் 500 மின்சார பேருந்துகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
சென்னை, மே.23- சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதற்கட் டமாக 500 மின்சார பேருந்துகள் சென்னையில் அறிமுகப் படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு அதனுடைய சேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லப் படும். பேட்டரி பைக்குகளால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை ஒன்றிய அரசு அதுகுறித்த கொள்கை முடிவு அறிவிக்க உள்ளதாக கூறிய அமைச்சர், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது. சிலிண்டருக்கு ஏற்கனவே ஒன்றிய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுத்தால் போதும் என்றார்.
சென்னையில் ஒரே வாரத்தில் 1,026 கிலோ போதை பொருள் பறிமுதல்
சென்னை, மே 23- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை யினர் கடந்த 15 ம் தேதி முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 22 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு 28 நபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1026 கிலோ 530 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட் டுகள், 200 கிராம் மாவா மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்ய ப்பட்டது. ஞாயிறன்று எழில்நகர், சர்வீஸ் சாலையில் எச்-6 காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 5 நபர்கள் ஒரு ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டி ருந்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத் தின்பேரில், ஆட்டோவில் ஏற்றிய மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப் பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 3 பேருக்கு கொரோனா
சென்னை,மே 23- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி யில் படிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 2 மாணவிகளுக்கு கொரோ னா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்த வர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என 100 பேரிடம் கொரோ னா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத் தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதி யில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கின்றனர்.
மாதர் சங்க பகுதி மாநாடுகள்
சென்னை, மே 23 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப் பேட்டை பகுதி 16வது மாநாடு ஞாயிறன்று (மே 22) நடை பெற்றது. பகுதி தலைவர் n ஜ.ஜூலியட் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி, சிஐடியு பகுதி ஒருங்கிணைப்பாளர் ஏ.சுந்தர், மாதர் சங்க பகுதிச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளா ளர் எஸ்.ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதிக்குழுவின் தலைவராக ெஜ.ஜூலியட், செயலா ளராக வி.கவிதா, பொருளாளராக ஆர். அன்னலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அண்ணாநகர் அண்ணாநகர் பகுதி மாநாடு பகுதி தலைவர் உஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செய லாளர் பி.சுகந்தி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன் மணி உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக உஷா, செயலாளராக நாகரத்தினம், பொருளாளராக ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லாவரத்தில் மாதர் சங்க கிளைகள் உதயம்
சென்னை, மே 23 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளைகள் பல்லாவரம் பகுதியில் உதயமாகி உள்ளன. இந்த கிளை அமைப்புக் கூட்டங்களில் பகுதி தலைவர் கவுரி, செய லாளர் ஜான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரிசூலம் முக்கனி அம்மன் தெரு கிளைத் தலைவராக ராதா, செயலாளராக ராஜேஸ்வரி, பொருளாளராக அஞ் சலை, திரிசூலம் முக்கனி அம்மன் தெரு 2வது கிளை தலைவ ராக ஜூபைதா, செயலாளராக சரளாதேவி, பொருளாளராக நிர்மலா தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திரிசூலம் பெரியார் நகர் கிளைத் தலைவராக ஜான்சி, செயலாளராக அசீனா பேகம், பொருளாளராக புனிதா, குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனி கிளை தலைவராக அம்மு, செயலாளராக கவிதா, பொருளாளராக ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரவாயல் மதுரவாயல் பகுதி, அயப்பாக்கம் 7வது வார்டில் நடை பெற்ற கிளை அமைப்புக் கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் ஷகிலா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக ஜானகி, செயலாளராக சரோஜா, பொருளாளராக சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருத்தம்
நேற்றைய (மே 23) இரண்டாம் பக்கத்தில் வெளியான “குடும்பத்தினரை கட்சி உறுப்பினர்களாக மாற்றுவோம்” என்ற செய்தியின் துணைத் தலைப்பு ‘தோழர் க.நா.வெங்கடேசன் படத்திறப்பு கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு’ என்று வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம். -ஆர்.
சர்வதேச கராத்தே: விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
விழுப்புரம், மே 23- மலேசியாவில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மலேசியாவில் மே 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச கராத்தே போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விழுப்புரம் அகில இந்திய புஷி ஷிட்டோரியோ தோ கராத்தே அசோசியேஷன் மூலம் பயிற்சி பெற்ற மாணவாகள் கவுசிகா நிவாஷினி (22), பிரவீன்குமார் (17), பிரனவ் குமரன் (9), சபரீஷ் (15) ஆகியோர் தகுதி பெற்றனர். கராத்தேவில் கட்டா, கும்தே ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மலேசியா செல்ல உள்ள இவர்களை விழுப்புரம் வி.ஆர். பி. பள்ளித் தாளாளர் சோழன், கராத்தே போட்டி தேசிய நடுவர் ரென்ஷி சுரேஷ் ஆகியோர் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி!
தூத்துக்குடி, மே 23 தூத்துக்குடி மாவட்டம், குலசேகரநல்லூர் அருகே உள்ள சங்கர ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தூர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது குடும்ப சொத்தில் உள்ள 7½ செண்ட் நிலத்தை பாகப்பிரிவினை பண்ணாத நிலையில் அந்த இடத்தில் இவரது சகோதரர் 2½ செண்டில் வீடு கட்டி வருவதாகவும், இதுகுறித்து வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செந்தூர் செல்வம் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள்
விழுப்புரம், மே 23- அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 1,821 அங்கன் வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 567 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசால் ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. மேலும், மதியம் ஊட்டச்சத்து உணவும் வழங்கப்படுகிறது. இதற்குத் தேவையான காய்கறிகளை அங்கன்வாடி ஊழியர்கள் கடைகளில் கொள்முதல் செய்து வரு கின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்குத் தேவையான காய்கறிகளை அந்தந்த அங்கன்வாடி மையங்களிலேயே சாகுபடி செய்யும் வகையில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் முன்னோடித் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் முதல்கட்டமாக 70 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தோட்டங்களில் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, தக்காளி, கத்திரி, வெண்டை, புடலை, கீரை வகை கள், புதினா, கொத்தமல்லி, கரு வேப்பிலை உள்ளிட்டவை சாகுபடிக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் வளாச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பழகி கூறுகையில், போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே முதல்கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 115 அங்கன்வாடி மையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அங்கன்வாடிகளுக்கு தலா ரூ. 2,700 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றியை பொறுத்து பிற அங்கன்வாடி மையங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை
தூத்துக்குடி, மே 23 ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை மேம் படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவை குண்டம் அரசு மருத்துவ மனை வளர்ச்சி மற்றும் மேம் பாட்டுக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “ஸ்ரீவை குண்டம் அரசு மருத்துவ மனையில் சுற்றுவட்டா ரத்தில் உள்ள பல்வேறு கிரா மங்களை சேர்ந்த ஆயிரக்க ணக்கான பொது மக்கள் தங்களுக்கு நோய்கள் ஏற் படும்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்பட பல் வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் சிறந்த முறை யில் அளிக்கப்பட்டு வரு வதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். எனினும் மருத்துவ பணி யாளர்களின் பற்றாக்குறை மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் அவசரகால சிகிச்சைகள் மற்றும் மேல் சிகிச்சைகளுக்காக பாளை யங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்ற னர். இதனால் அரசு மருத் துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் உயர் தர தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.