சிவகங்கை,பிப்.17- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் தமிழ் கனவு நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பேசு கையில் , தமிழ் பண்பாட்டின் பெருமையை எதிர்கால சந்ததிகளாகிய மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழ் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. இத னை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி,தமிழ் இணைய கல்வி தரக ஆய்வு வளமையர் காந்திராஜன், கோட்டாட்சி யர் பால்துரை, பேராசிரி யர் அருணன், சிவராஜா ராமனாதன் ,காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, பேராசிரியர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.