districts

img

குளத்ததில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் குளத்திற்கு குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 வயதான சிறுமி மீனாட்சி,  7 வயதான சந்தோஷ் மற்றும் 5 வயதான மகேந்திரன் உட்பட 3 பேர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து உலகம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உலகம்பட்டி காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மிதந்த  சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

;