districts

img

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி தொடங்காவிட்டால் காத்திருப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

திருப்பூர், ஏப்.27- கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி களை மே 1ஆம் தேதியன்று தொடங்க வேண் டும். இல்லையென்றால் 5ஆம் தேதி முதல்  தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட  போவதாக கீழ்பவானி ஆயகட்டு நில உரிமை யாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயி கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.ராமசாமி, செயலாளர் இரா.ஈஸ்வரமூர்த்தி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க  தலைவர் எஸ்.பெரியசாமி, செயலாளர் கி. வே.பொன்னையன் உள்ளிட்டோர், வியாழ னன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்தை சந்தித்து, கீழ்பவானி கால்வாய் சீர மைப்பு வேலைகளை உடனடியாக துவங்க  வேண்டும் என மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கீழ்பவானி விவசாயி கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட் டம் 2020ஆம் ஆண்டு அரசாணை எண் 276 இன் படி அறிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஒரு  சில காரணங்களால் பாதியில் பணி நிறுத் தப்பட்டது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் செய் யப்படாத காரணத்தால்

இந்த 2022 – 2023  பாசன ஆண்டில் மட்டும் 4 முறை கால்வாயில்  உடைப்புகள் ஏற்பட்டு, ஒரு மாத காலம் தண் ணீர் இடை நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நட்டத்தை சந்தித்தனர். இதனிடையே சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொது நல வழக்கு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சீர மைப்பு பணிகளை வரும் மே 1 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச்  மாதம் 31ஆம் தேதி ஆணையிட்டது.  எனவே காலம் தாழ்த்தாமல் மே 1 ஆம்  தேதி சீரமைப்பு பணிகளை தொடங்க வேண் டும் என, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள் ளோம். இதேபோல் ஈரோடு மாவட்ட ஆட்சிய ரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1ஆம் தேதி கீழ்பவானி வாய்க் கால் சீரமைப்பு பணிகளை தொடங்கவில்லை யென்றால் மே 5ஆம் தேதி முதல் ஈரோடு  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்த னர்.