ஈரோடு, மே 26- சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரப் படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் நடைபய ணம், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்டது மண்கரடு, அண்ணா நகர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு 35 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற் சமயம் அந்த வீடுகளின் சுவர்கள் விரிசலடைந் துள்ளது. கான்கிரீட் மேற்கூரை சிதிலம டைந்து, மழை நீர் கசிந்தும், கம்பிகள் துருப் பிடித்துள்ளது. எந்த நேரமும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாக குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவித்து வந்தனர். உழைப்பாளி, தலித் மக்களான இவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டம் என்கிற நிலையில், சொந்த செலவு செய்து வீடுகளை மராமத்து செய்வ தற்கான வசதி இல்லாத நிலை உள்ளது. இந்த வீடுகளை புதுப்பித்து தரவேண்டும் என அரசு நிர்வாகத்திடம் இம்மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனையடுத்து, வீடுகளை புதிதாக கட் டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க்தின் சார் பில் நடைபயணம் அறிவிக்கப்பட்டது. அதன் படி வெள்ளியன்று நடைபயணம் தொடங்கும் முன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இரண்டு மாத காலத்தில் புதிய வீடுகள் கட் டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், விதொச போராட்ட அறிவிப்பால் எங்களின் கோரிக்கை வெற்றி பெற்றது, என் றனர் இதில் விதொச மாவட்ட தலைவர் ஆர். விஜயராகவன், செயலாளர் கே.சண்முக வள்ளி, தாலுகா செயலாளர் டி.தங்கவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உதவி தலைவர் எம்.சசி, எம்.அண்ணாதுரை, எம்.லோகநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.