districts

இலங்கை குண்டுவெடிப்பு

திருவனந்தபுரம்,ஏப்.28-இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட மதகுரு ஜஹ்ரான் ஹாஷிமின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறப்படும், கேரளத்தை சேர்ந்த 2 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம், நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி பலியானான்.இந்நிலையில் இணையத்தின் மூலம் ஜஹ்ரான் ஹாஷிம் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறப்படும், கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 2 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள்(என்ஐஏ) ஞாயிறன்று திடீர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்ளூர் போலீசாருக்கு கூட தெரிவிக்கப்படாமல் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களான அபுபக்கர் சித்திக், அஹ்மத் அராஃபத் ஆகிய இருவரையும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

;