districts

img

கொளுத்தும் வெயில் சூடு பிடிக்கும் தர்ப்பூசணி பழம் விற்பனை

பள்ளிபாளையம், பிப்.22- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தர்பூசணி பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் மாதங்களில் தர்ப்பூசணி பழம் விளைவதற்கான சீசன் காலமாகும். தற்போது பிப்ரவரி மாத இறுதியிலே, வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் சாலையோரத்தில் விற்கப் படும், தர்பூசணி பழங்களை அதிகம் விரும்பி வாங்குகின்ற னர். ஒரு கிலோ பழம் ரூ.20, ரூ.30 வரை விற்பனை செய்யப் பட்டுகிறது. அடுத்த மாதத்தில் அதிகளவு பழங்கள் இறக்குமதி செய் யப்படும் என வியாபாரிகள் தெராவித்தனர். கோடை காலத் திற்கு தர்ப்பூசணி பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ப தால் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.