சேலம், நவ 25- மார்க்சிஸ்ட் கட்சியின் கொங் கணாபுரம் ஒன்றியச் செயலாள ராக எஸ். முத்துசாமி தேர்வு செய் யப்பட்டார். சேலம் மாவட்டம் கொங் கணாபுரம் ஒன்றிய 6 ஆவது மாநாடு கொங்கணாபுரம் கட்சி அலுவலகத்தில் டி.மூர்த்தி நினை வரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் டி.ராமசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே. எஸ். செங்கோட்டையன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே. வெங்கடேசன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜீ.கணபதி துவக்கவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.கவிதா வாழ்த் துரை வழங்கினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் எஸ். முத்துசாமி சமர்ப் பித்தார். இதனைத் தொடர்ந்து, கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளராக எஸ். முத்துசாமி உள்ளிட்டு ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இதில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அதிக வட்டியை கட்டுப்படுத்தி கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். வெள்ளாளபுரம் ஊராட்சி அக்கரைப்பட்டி காட்டுவளவு, ராயணம் பட்டி, எல்லம்மன் கோவில் முதல் சரபங்கா பகுதி உள்ளிட்ட பகு திகளில் தார் சாலை அமைக்க வேண்டும். ராயணம் பட்டி பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. சேகர் மாநாட்டை நிறைவு செய்து உரையாற் றினார். முடிவில், தாலுகா குழு உறுப்பினர் சி.எஸ். பழனியப்பன் நன்றி கூறினார்.