கோவை, ஜூன் 22- கோவை புறநகரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல பெய்ய தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட் டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனியன்றும், ஞாயிறன்றும் தமிழகத்தில் கனம ழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இந்நிலையில், கோவை புற நகரப் பகுதிகளில் வானம் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப் பட்டு வந்தது. பிற்பகலில் அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களான கரி யாம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம், எல்லப்பாளையம் உள் ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோவை புறநகரப் பகுதிகளில் வெப் பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், விளைநிலங்க ளுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய அவசி யம் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.