districts

img

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா சேலம் புதிய பேருந்து நிலையம்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கி.கிரிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தனராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் சிறப்புரையாற்றினார். இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கேசவ கீர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர். ஆர்.கார்த்திக் நன்றி கூறினார்.