districts

img

கொரோனாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இஎஸ்ஐ மாதாந்திர உதவி தொகை வழங்கல்

திருப்பூர், ஜன.31- திருப்பூரில் கொரோனா தாக்குத லால் உயிரிழந்தவரின் குடும்பத்தின ருக்கு இஎஸ்ஐ நிறுவனத்தின் மூலம்  மாதாந்திர உதவித் தொகை வழங்கப் படுகிறது. கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை இஎஸ்ஐ நிறுவனம் அறிமு கப்படுத்தி உள்ளது. இதன்படி இஎஸ்ஐ யில் பதிவு செய்திருக்கும் தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பத்தின ருக்கு சராசரி 90 சதவிகித ஊதியம் வாழ்நாள் முழுவதும் அவர்களது வங் கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்ப டும். மேலும் இறந்தவரின் மனைவிக்கு  இஎஸ்ஐ நிறுவனத்தில் மருத்துவ உத வியும் வழங்கப்படும். திருப்பூர் ஷைனி நிர்வேர் நிறுவனத் தில் சீ.கருணாகரன் (69), என்பவர் பாது காவலராக பணிபுரிந்து வந்தார். அவ ரது மாத ஊதியத்தை நம்பி அவரது மனைவி அமராவதி (66), வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த  ஆண்டு மே 8ஆம் தேதி கருணாக ரன் கொரோனா தொற்றில் பாதிக்கப் பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கருணாகரன் இஎஸ்ஐயில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளியாக இருந் ததால் அவருடைய குடும்பத்தார் கொரோனா நிவாரணம் பெறுவதற் குத் தகுதி பெற்றவர்களாக இருந்த னர்.  எனவே இவரது குடும்பத்தாருக்கு கொரோனா நிவாரணம் வழங்க இஎஸ்ஐ கோவை சார் மண்டல துணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நாளொன்றுக்கு ரூ.189 வீதம்  மாதம் ரூ.5670 கருணாகரன் மனைவி  அமராவதியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்துடன் கருணா கரன் இறுதிச்சடங்கிற்கான தொகை  ரூ.15 ஆயிரம் மற்றும் நிலுவைத் தொகை ரூ.44ஆயிரத்து 793ம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூர் கிளை மேலாளர் திலீப் நிவாரண உதவித் தொகைக்கான ஆணை மற்றும் உதவித் தொகை அடையாள அட்டையை கருணாகரன் வேலை செய்த நிறுவனத்தின் மனித வள மேலாளர் அனுஷா முன்னிலை யில், கருணாகரனின் குடும்பத்தா ருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் காசா ளர் தேவராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.