districts

img

அவுட்சோர்சிங் முறையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன.4- அவுட்சோர்சிங் நடைமுறையை முற்றாக கைவிட வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நிலை காலிப்பணியிடங் களையும் உடனடியாக நிரப்ப வேண் டும். அவுட்சோர்சிங் நடைமுறையை கைவிட வேண்டும். கிராம ஊராட்சி செய லர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை  ஊதியம், மருத்துவ விடுப்பு, வரையறுக் கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடை உள்ளிட்ட அனைத்து உரிமை களையும் உடனடியாக வழங்க வேண் டும். நூறுநாள் வேலை திட்ட கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்தி, மேம்படுத்தப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங் களை பிரிக்க வேண்டும். பணி மேற்பார் வையாளர் அளவீடு மதிப்பீடு உச்ச வரம் பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண் டும். ஏழு ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனை வரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு வட்டார திட்ட  அலுவலர் ஒருங்கிணைப்பாளர் அல் லது வட்டார வளர்ச்சி அலுவலர் பணியி டத்தை ஊழியர் கட்டமைப்புடன் ஏற்ப டுத்த வேண்டும். வளர்ச்சித்துறை அலு வலர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் பிறதுறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி  துறை திட்ட இயக்குநர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.முக மது இலியாஸ், தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வெ. தர்மன், பொருளாளர் வினோத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க ஒருங் கிணைப்பாளர் ச.இளங்குமரன், மாநில செயற்குழு உறுப்பினர் பா.சங்கர், ஊராட்சி செயலாளர் சங்க ஒருங்கி ணைப்பாளர் ஜெ.சர்க்கரைவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிதி  காப்பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்த கொண்டனர்.

சேலம்

இதேபோன்று சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி.ஜே.கண்ணன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் ந.திருவ ரங்கன், மாவட்டச் செயலாளர் ஜான்  ஆஸ்டின், பொருளாளர் வடிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்த நாரி உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.