districts

img

கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 15- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலி யர், தூய்மை பணியாளர்கள், மின்சாரம், அங்கன்வாடி, காவல் துறை, ரேசன்கடை பணியாளர் கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்க ளுக்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சாலை போக்கு வரத்து மாவட்ட செயலாளர் வீரமுத்து, சுப்ரமணி ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்ட பொருளாளர் அன்புசெல்வம், புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட நிர்வாகிகள் ஜெய ராமன், வெற்றிவேல், ரெங்கசாமி, இருதயராஜ், நடராஜன் கலந்து கொண்டனர்.

சோனா மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செயலா ளர் மணிகண்டன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில நிர்வாகி ராமச்சந்திரன், டிஆர்இயு கரிகாலன் ஆகியோர் பேசினர். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சந்திரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், முத்துவேல், சம்பத், ரயில்வே செல்வராஜ், மகேந்திரன் பலர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

இதே போல் நாகை அரசு விரை வுப் போக்குவரத்துத் தொழிலா ளர்கள், அரசுப் போக்குவரத்து (குடந்தை மண்டலம்) தொழிலா ளர்கள் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் நாகை இரு பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு விரை வுப் போகுவரத்து ஊழியர் சங்கக் கிளைச் செயலாளர் ஆர்.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் சு.சிவகுமார் விளக்கவுரையாற்றினார். அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தரங்கம்பாடி

மயிலாடுதுறையில் சிஐடியு சார்பில் சிறு விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர். ரவிந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  திருக்கடையூரில், கட்டுமான சங்கம் (சிஐடியு) சார்பில் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி யின் வட்ட செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஜி.கலைச்செல்வி, டி.சிம்சன், வாலிபர் சங்க வட்ட செயலாளர்  மார்க்ஸ், வட்டத் தலைவர் சர வணன், செல்வம் (போக்குவரத்து ஊழியர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கரூர்

சிஐடியு சங்க கரூர் மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் பி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் சி.முரு கேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு சங்க மாவட்ட துணை செயலாளர்கள் கா.கந்த சாமி, ஹோச்சுமின், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிறு மன்னன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், கலா, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு சங்க கரூர் ஒன்றிய குழு சார்பில் ஒன்றியக் குழு அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ராமசுப்பு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், ராஜேந்திரன், சக்திவேல், அரவிந்த் கலந்து கொண்டனர்.