கரூர், நவ.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் கடவூர் வட்ட குழுவின் சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.70 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.