ஈரோடு, ஆக.17- ஆதிக்கசாதியை சேர்ந்த ஒரு வரின் அச்சுறுத்தலால் தலித் ஒரு வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவத்தில் தொடர் புடையவரை போலீசார் இதுவரை கைது செய்யாததால் அனைத்து முற்போக்கு மற்றும் தலித் அமைப் பினர் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கொடு முடி, நகப்பாளையத்தைச் சேர்ந்த வர் முருகேசன் (41). பட்டியலினத் தைச் சேந்த இவர் அருகிலுள்ள விருப்பம்பாளையம் துரைராஜ் என் பவரின் கெமிக்கல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக முருகேசன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், கடந்த ஆக.13 ஆம் தேதியன்று முருகே சனின் இருசக்கர வாகனத்தை துரை ராஜ் பறித்துக் கொண்டு தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்த முருகே சன் தனது வீட்டு சுவற்றில், எனது மரணத்திற்கு துரைசாமிதான் கார ணம் என எழுதி வைத்துவிட்டு தூக் கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இது சம்பந்தமாக கொடுமுடி காவல் நிலையத்தில் சந்தேக மர ணம் என வழக்குப்பதிவு செய்யப் பட்டு, கொடுமுடி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே, மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். வன்கொடுமை தடுப்புச் சட்டத் தில் வழக்குப்பதிவு செய்ய வேண் டும். முருகேசன் உயிரிழப்பிற்கு காரணமானவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். பின்னர், இறந்தவர் வீட்டிலே உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு காவல் கண்காணிப்பாளர் கொடுமுடி காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை செய்துள்ளார். அதன்பின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு மாறுதல் செய்யப் பட்டுள்ளது. ஆனால், குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இத னிடையே, போராட்டக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு, ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர், துரைராஜை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்குவது, எஸ்சி/எஸ்டி வழக்கை சட்டப் படி கையாளாத கொடுமுடி உதவி ஆய்வாளர் அப்பாதுரை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, துரைராஜை கைது செய்யும் வரை பிரேதத்தை பெறுவதில்லை என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ள னர். 5 ஆவது நாளாக சனியன்றும் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி, கொங்குநாடு விடுதலை புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீ.விஸ்வநாதன், சமூக நீதி கட்சியின் மாநிலச் செயலாளர் வடிவேல் ராமன், சமாஜ்வாடி கட்சி யின் சென்னியப்பன், ஆதித்தமிழர் பேரவை மாநில ஊடகப்பிரிவு செயலாளர் வீர வேந்தன், தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்.சுந்தரம் மற்றும் தற்கொலை செய்து கொண்ட முரு கேசனின் உறவினர்கள் என அனை வரும் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.