நாமக்கல், அக்.29- வெடியரசம் பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், வெடியரசம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி உபர கணங்கள் வழங்கும் விழா செவ்வாயன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரி யர் தலைமை வகித்தார். இதையடுத்து தனி யார் நிதி நிறுவனத்தின் சார்பில், ரூ.4 லட்சம் மதிப்பிலான 18 பீரோக்கள், 38 மேசைகள் & இருக்கைகள், ஒரு பிரிண்டர் போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருச் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், பள்ளிபாளையம் அக்ரஹார ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி வெங்கடாசலம், பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.