ராயக்கோட்டை, டிச. 26- கிருஷ்ணகிரி மாவட்டம், நாக மங்கலத்திலிருந்து பெங்களூருவுக்கு தனியார் பேருந்து சென்றது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கெலமங்கலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. பயணிகள் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெல மங்கலம் காவல் துறையினர் படுகாய மடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த யசோதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்தின் பின் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.