கிருஷ்ணகிரி, மார்ச் 11- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம் தொட்ட மஞ்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. திட்டங்கள் குறித்து ஓசூர் சாராட்சியர் சரண்யா பேசினார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள, நல உதவிகள் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் எடுத்து கூறினர். பின்னர் ஆட்சியர் பேசு கையில், “மலைக் கிராமங்களில் கல்வியறிவு 57 விழுக்காடு மட்டுமே உள்ளதால், குழந்தை களை படிக்க வைக்க வேண்டும்”என்றார். தளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி அளித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மலை கிராமங்களில் சிறார் திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை செய்தார்.