கிருஷ்ணகிரி,மார்ச் 21- கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன பள்ளியிலிருந்து பேரிகை செல்லும் சாலை 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. 28 கி.மீ. நீள முள்ள இந்த சாலையில் 24 மணி நேரமும் லாரி கள் குவாரிகளுக்கு ஓய்வில்லா மல் சென்று வரு கின்றன. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்கு வரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காய மடையும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, ஜெய்சங்கர், சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.