districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, ஜன. 16- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதிக்கு மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. இந்நிலை யில் தியாகதுருகம் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அங்கு வசிக்கும் 500க்கும் மேற் பட்ட குடும்பங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள் தியாக துருகம் - திருக்கோவிலூர் சாலை யில் காலிக் குடங்களுடன் மறி யலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் காவல் துறையினர், பேரூ ராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடு பட்டவர்களிடம், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.

;