districts

img

மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி,பிப்.21- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழுசார்பில் பிப்ரவரி 21 முதல் 25 வரை போதையில்லா சமூகம் அமைப்போம், இளைஞர்களை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயகத்தை நடத்தி வருகிறது. சுதந்திர போராட்ட வீரரும் தகைசால் தமிழர் விருது பெற்ற  தோழர் என்.சங்கரய்யா இந்த இயக்கத்தை துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம் கள மருதூர் பேருந்து நிறுத்தம் பகத்சிங் திடலில் ஒன்றியச் செயலாளர் டி. ரகு தலை மையில் நடந்த நிகழ்ச்சியில் திருநாவலூர் காவல்நிலைய ஆய்வாளர் டி. அசோகன், களமருதூர் தலைமை ஆசிரியர் எம். பாபு கென்னடி ஆகியோர் துவக்கி வைத்தனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் எம்.சிவக்குமார், பொருளாளர் பி.பத்மநாபன், ஒன்றியத் தலைவர் தங்கமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ். மோகன், விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே. ஆனந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் அய்யனார், ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.