கள்ளக்குறிச்சி, மார்ச் 22- உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவி கிராமத்திற்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக அதி காரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை செம்பியன் மாதேவி ஊராட்சி பரமேஸ்வரி மங்கலம் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வியாழனன்று (மார்ச் 23) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று (மார்ச் 21) வட்டாட்சியர் கட்சி நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ஜெய மூர்த்தி, ஆர்.செல்வராஜ், பி.பாண்டி யன், எம்.அர்ஜூனன், எம்.பிரேமா, மலர், முனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, முறையாக குடிநீர் வழங்கவும், கழிவுநீர்கால்வாய், சலை உள்ளிட்டவை அமைக்கப்படும், செட்டியந்தால் பகுதியில் புதிய நியாய விலை கடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும், உளுந்தூர்பேட்டை யில் இருந்து பரமேஸ்வரி மங்கலம் வழியாக பின்னல்வாடி வரை பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.