கள்ளக்குறிச்சி, ஜன.25- கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜனநாயக கடமையாற்றிட 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலு வலர் சத்தியநாராயணன் அறி வுறுத்தினார். தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமையில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி தனியார் பள்ளி கலை யரங்கத்தில் வாக்காளர் தின விழா புதனன்று (ஜன. 25) நடைபெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், மாண வர்களாகிய நீங்கள் ஜனநாயக கடமை ஆற்றிட 18 வயது பூர்த்திடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களு டைய பெயரை சேர்த்து, கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் 17 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு இப்பொழுதே தம்முடைய பெயரை வாக்காளர் பட்டி யலில் சேர்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது என தெரி வித்தார். இதில் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்.கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலகுரு, வருவாய் வட்டாட்சி யர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.