districts

img

தென்னிந்திய ஜூடோ போட்டி  பரணி வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டம் வென்று சாதனை

கரூர், டிச.7 - தென்னிந்திய ஜூடோ போட்டியில் பரணி வித்யா லயா தொடர்ந்து 10 ஆவது  முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று ஹரியானாவில் டிசம்பர் மாத இறுதியில் நடைபெ றும் தேசிய போட்டி களில் பங்குபெற தேர்வாகி யுள்ளது. தென்னிந்திய அளவி லான சிபிஎஸ்இ பள்ளி களுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டு போட்டிகள்  திருப்பூரில் நடை பெற்றன. தென் மாநி லங்களை உள்ளடக்கிய சிபிஎஸ்சி பள்ளிகளிலிருந்து 49 வகையான பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் கரூர் பரணி வித்யா லயா பள்ளி மாணவர்கள் 25 பேர் தங்கப்பதக்கமும், 7  மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், 9 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் வென் றுள்ளனர். இப்போட்டியில் பரணி வித்யாலயா பள்ளி யைச் சேர்ந்த 48 மாண வர்கள் பங்கேற்றதில், 40 பேர்  பதக்கங்களை வென்றனர். மொத்தம் 24 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப் பதக் கங்கள் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவி லும் சாம்பியன் பட்டம் பெற் றுள்ளனர். இதன் மூலம்  புள்ளிகளின் அடிப்படை யில், 10 ஆவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பரணி வித்யா லயா பள்ளி வென்றுள்ளது.    அண்மையில் கொங்கு சகோதயா பள்ளிகள் கூட்ட மைப்பின் சார்பில் நடை பெற்ற மாநில ஜூடோ போட்டி களிலும் பரணி வித்யாலயா 43 தங்கப்பதக்கம், 47  வெள்ளிப் பதக்கம், 6 வெண் கலப் பதக்கம் வென்று  மொத்தம் 96 பதக்கங் களுடன் ஒட்டு மொத்த சாம்பி யன் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த  சாம்பியன் பட்டம் பெற்று  தமிழகத்திற்கும், பள்ளிக் கும் பெருமை சேர்க்க உறு துணையாக இருந்த, தமிழ் நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி  பார்க் கல்வி குழும முதன்மை  முதல்வருமான முனைவர் சி.ராமசுப்பிரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பயிற்சியாளர்கள், சாதனை படைத்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் ஆகி யோருக்கு சிறப்பு வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பரணி  பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செய லர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் எம்.சுபாஷினி மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.