கரூர், ஜன.22 - ஹரியானா மாநிலம் சோனிபட்-இல் தேசிய சி.பி.எஸ்.இ. ஜூடோ போட்டிகள் அண்மையில் நடை பெற்றன. இதில் பல்வேறு மாநிலங்களி லிருந்து 60-க்கும் மேற்பட்ட பள்ளி கள் பங்கு பெற்ற தேசிய இறுதிப் போட்டி களில் மிகச் சிறப்பாக விளையாடிய கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் அக்க்ஷயா, சஹானா ஆகியோர் 2 வெண்கலம் வென்றனர். தில்லியில் அண்மையில் நடை பெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பரணி வித்யாலயா மாண வர் கோகுல், சிறப்பாக விளையாடி முதல் பத்து இடங்களில் ஒருவராக தேர்வு பெற்றார். மேலும், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய ஸ்கேட்டிங் போட்டி யில் பரணி வித்யாலயா மாணவர் கனி ஷ்கர் சிறப்பிடம் பெற்றார். தேசிய அளவில் 2 வெண்கலம் வென்ற மற்றும் பல்வேறு தேசிய போட்டிகளில் தமிழகம் சார்பாக பங்கேற்று கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, பள்ளி திரும்பிய பரணி வித்யாலயா வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய அளவில் வெண்கலம் வென்ற மாணவிகள் மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை தாளாளர் எஸ். மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபா ஷினி, முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ். சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.