districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு கரூர் மாவட்ட 3-ஆவது மாநாடு

கரூர், அக்.13- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கரூர் மாவட்ட மூன்றாவது மாநாடு பள்ளப்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் சி.ஆர்.ராஜாமுகமது தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வின் மாநில துணைத்தலைவர் ஹாஜி  மூசா, மாநில செயலாளர் வ.கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாய சங்க மாவட்ட தலைவர் கா. கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்ட செயலா ளர் சி.முருகேசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா, அரவக் குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர் கே.வி.கணே சன், பாஸ்டர் பி.ஜான்சன், வரவேற்பு குழு தலைவர் என். சேட்டு, வரவேற்பு குழு செய லாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் மாநாட்  டில் பேசினர். இதில் நூற்றுக்கு மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், மாவட்டத் தலைவராக ஆர்.ஹோசுமின், மாவட்டச் செயலாளராக சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டப் பொரு ளாளராக பி.ராஜீவ்காந்தி உள்ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்  யப்பட்டது. மாநாட்டில், கரூர் மாவட்டத்தின் பிர தான தொழிலான ஜவுளி உற்பத்தி செய்யும் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கரூரிலிருந்து பள்  ளப்பட்டி வழியாக ஒட்டன்சத்திரம், பழனி  மார்க்கத்தில் கேரள மாநிலத்தை இணைக்  கக்கூடிய இணைப்பு புதிய ரயில் பாதை  அமைத்து கொடுக்க வேண்டும்,  முருங்கை  மதிப்பு கூட்டு தொழிற்சாலை அரவக்குறிச்சி பகுதியில் தொடங்கிட வேண்டும், சிறு பான்மை நல ஆணையத்தின் மூலமாக சிறு பான்மை மற்றும் பிற்படுத்த மக்களுக்கான கல்விக் கடன், தொழில் கடன்களை குறைந்த  பட்ச நிபந்தனைகளுடன் அரசு ஆவன  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.