கரூர், அக்.19 - 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி களில் ஒன்றான சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில் குஜராத் மாநிலம் வதோதரா வில் நடைபெற்றது. இப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவி சுஷ்மிதா தமிழக அணியின் சார்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர், அண்மையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 16-வது ஜூனியர் தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தனி இரட்டையர் மற்றும் குழு பிரிவில் இரு தங்கப் பதக்கங்க ளையும்,புதுதில்லியில் ஏப்ரல் மாதம் நடை பெற்ற 3-வது ஃபெடரேசன் கோப்பை சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குழுப் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றார். மேலும் கடந்த மாதம் தாய்லாந்தில் நடை பெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ் குழுமம் நடத்திய சர்வதேச சாப்ட் டென்னிஸ் தனி நபர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென் றார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சாதனை மாணவி சுஷ்மிதா மற்றும் அவருக்கு டென்னிஸ் பயிற்சியளித்த பயிற்சியாளர் மோகன் மற்றும் வினோத்குமார் ஆகியோ ருக்கு செவ்வாயன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் எஸ்.மோகன ரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரங்கன் வரவேற்று பேசினார். பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பரணி பார்க் முதல்வர் கே.சேகர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.